Saturday 20th of April 2024 05:35:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
மாவிட்டபுரத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

மாவிட்டபுரத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!


யாழ்., மாவிட்டபுரத்திலுள்ள பாதுகாப்பான ரயில் கடவையில் ரயிலுடன் மோதி நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ரயில் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த நிலையில் அறியாமையால் மோட்டார் சைக்கிளில் பயணிக்க முற்பட்ட வேளையே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் சாந்தை - பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE