Friday 19th of April 2024 09:36:45 PM GMT

LANGUAGE - TAMIL
-
வடமராட்சி கிழக்கில்  வன்முறை! நால்வர் கைது!

வடமராட்சி கிழக்கில் வன்முறை! நால்வர் கைது!


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்த குழு ஒன்று சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் வீட்டின் சீற், ஜன்னல் கண்ணாடிகள், குளிர்சாதன பெட்டி, வேலி என்பன சேதமடைந்துள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் கண்ணாடி போத்தல்களை உடைக்க வேண்டாம் என்று குறித்த சேதமாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்டதாகவும் அவ்வாறு தெரிவித்ததன் காரணமாகவே தமது வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வீடுகளின் உரிமையாளர்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதிலும் இரண்டு தரப்புக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே வன்முறையாக மாறியிருப்பதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நால்வர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE