கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணங்கள் நேற்று இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் இதுவரையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை