ரஷ்ய நடவடிக்கை அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை என ரஷ்ய நடவடிக்கை அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை என பி.சி.சியின் பாதுகாப்பு செய்தியாளர் கோர்டன் கொரேரா தெரிவித்துள்ளார்.
அணுசக்தி படைகளை சிறப்பு எச்சரிக்கை நிலையில் வைக்குமாறு ஜனாதிபதி புடின் இன்று தனது இராணுவ கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார். இது அணு யுத்தம் குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.
நேட்டோ நாடுகளின் தடைகள் மற்றும் உக்ரைனுக்காக அதிகபட்ச ஆயுத, நிதி உதவிகளின் பின்னணியில் இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான தனது படையெடுப்பைத் தொடங்கியவுடன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக ரஷ்யத் தலைவர் ஏற்கனவே ஒரு குறியீட்டு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார்.கடந்த வாரம், எங்களுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிப்பவர்கள் "உங்கள் வரலாற்றில் நீங்கள் கண்டிராத" விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த வார்த்தைகள் மேற்கு நாடுகள் அவரது வழியில் நின்றால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தலைக் குறிப்பதாக பரவலாக விளக்கப்பட்டது.
உயர் எச்சரிக்கை நிலைக்கு பொது மாற்றம் மொஸ்கோவிற்கு ஒரு எச்சரிக்கையை அனுப்புவதற்கான ஒரு வழியாகும். எச்சரிக்கை நிலைக்கு நகர்வது ஆயுதங்களை விரைவாக ஏவுவதை எளிதாக்கும்.
ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்கான தற்போதைய நோக்கம் இருப்பதாக இது அர்த்தப்படுத்துவதில்லை என பி.சி.சியின் பாதுகாப்பு செய்தியாளர் கோர்டன் கொரேரா கூறியுள்ளார்.
உலகிலேயே அதிக அணு ஆயுதக் குவிப்பு ரஷ்யாவிடம் உள்ளது, ஆனால் அவற்றைப் பயன்படுத்தினால் ரஷ்யாவை அழிக்கும் அளவுக்கு நேட்டோவிடம் உள்ளது என்பதும் தெரியும்.
ஆனால் உக்ரைனுக்கான நேட்டோ ஆதரவால் தான் எந்ந் கட்டத்துக்கும் செல்லத் தயாராக இருக்கிறார் என்ற அச்சத்தை உருவாக்கி அதன்மூலம் நேட்டோ ஆதரவைத் தடுக்க முயற்சி செய்யலாம் என பி.சி.சியின் பாதுகாப்பு செய்தியாளர் கோர்டன் கொரேரா குறிப்பிட்டுள்ளார்.