கிளிநொச்சி நகரப்பகுதியில் இன்று (28-02-2022)மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி ஏ-9 வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று(28-02-2022) மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி