Wednesday 24th of April 2024 07:55:21 PM GMT

LANGUAGE - TAMIL
.
அனைத்து வலயங்களுக்கும் இன்றைய தினம் சுழற்சி முறையில் 3 மணி நேரம் மின்வெட்டு!

அனைத்து வலயங்களுக்கும் இன்றைய தினம் சுழற்சி முறையில் 3 மணி நேரம் மின்வெட்டு!


எரிபொருள் விநியோகம் தொடர்பான சிக்கல் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய தினமும் (மார்ச்-01) அணைத்து வலயங்களுக்கும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அனைத்து வலயங்களுக்கும் இன்று சுழற்சி முறையில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் இந்த மின்வெட்டு அமுலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினுள், அதிக மின் கேள்வி நிலவும் இரவு வேளைகளில், தேவை ஏற்படின் திட்டமிடப்படாத 30 நிமிட மின்துண்டிப்பு அமுலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின் நுகர்வை குறைத்து சிக்கனம் பேணுமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE