Thursday 25th of April 2024 09:23:59 AM GMT

LANGUAGE - TAMIL
.
18 இலட்சம் பரல் பெற்றோலை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

18 இலட்சம் பரல் பெற்றோலை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல்!


பெப்ரவரி 15-ஆம் திகதி முதல் ஒக்டோபர் 14-ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சம் பீப்பாய்கள் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனமொன்றுக்கு வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இலங்கை தற்போது கடும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. டொலர் பற்றாக்குறை காரணமாக எரிபொருட்களை இறக்குமதி செய்ய முடியாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தினசரி நீண்ட நேர மின்வெட்டு அமுல் செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE