வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
21 மற்றும் 22 வயதுகளையுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.