Friday 29th of March 2024 04:32:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ள சுகாதார தொழிற்சங்க சம்மேளனம்!

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ள சுகாதார தொழிற்சங்க சம்மேளனம்!


தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காததால், நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

காதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், குறித்த தினத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள், இதுவரையில் நிறைவேற்றப்படாமல் உள்ளதால், நாளை முதல் 2 நாட்களுக்கு, மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE