Wednesday 24th of April 2024 08:16:38 PM GMT

LANGUAGE - TAMIL
-
உக்ரைனில் உள்ள 40 இலங்கையர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!

உக்ரைனில் உள்ள 40 இலங்கையர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!


உக்ரைனில் உள்ள இரண்டு மாணவர்கள் உட்பட, சுமார் 40 இலங்கையர்களை, உக்ரைன் - போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில், தற்போது ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளியேற்றும் செயன்முறையை, திறம்பட எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக, வோர்சோவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வளங்களை வழங்கும் பணியை அமைச்சு பலப்படுத்தியுள்ளது.

உக்ரைனை விட்டு வெளியேறும் இலங்கைப் பிரஜைகளுடன், அங்காரா மற்றும் வோர்சோவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள், தொடர்ந்தும் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதுடன், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும், இலங்கைக்கு மீளத்திரும்புவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு உள்ள, ஏறத்தாழ ஆயிரத்து 600 இலங்கைப் பிரஜைகளுடன், மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் தொ டர்ந்தும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும், சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிக் கொள்ளுமாறு, பிராந்தியத்தில் உள்ள இலங்கைப் பிரஜைகளை வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE