இலங்கையில் தங்கியிருக்கும், உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு, தங்குமிட வசதிகளை வழங்க, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், உக்ரைன் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து, தங்குமிட வசதிகளுக்கான கோரிக்கை இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கையில் தங்கியுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரஜைகளுக்கு இடையே, முரண்பாட்டு நிலை ஏற்பட்டால், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, காவல்துறைக்கு அறிவித்துள்ளதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.