Friday 19th of April 2024 11:49:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஜனாதிபதியிடமிருந்து 13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களைப் பெற்றனர்!

ஜனாதிபதியிடமிருந்து 13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களைப் பெற்றனர்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் 13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

ஏ.ஜி. அலுத்கே, ஆர்.ஆர்.ஜே.யு.டி.கே. ராஜகருணா, ஆர்.ஏ.டி.யு.என். ரணதுங்க, டி.எம்.சீ.எஸ். குணசேகர, எம். பிரபாத் ரணசிங்க, ஆர்.எம்.எஸ்.பி. சந்திரசிறி, ஆர். வெலிவத்த , ஜி.எல். பிரியந்த, ஏ. நிஷாந்த பீரிஸ், எஸ்.எம்.ஏ.எஸ். மஞ்சநாயக்க , எல். சமத் மதநாயக்க , வி.எம். வீரசூரிய, எச்.ஏ.டி.என். ஹேவாவசம் ஆகியோரே மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெ்றவர்களாவர்.

சிரேஷ்ட தொழில் அனுபவத்தின் அடிப்படையில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்கவும் தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி நீதிபதிகளிடம் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE