இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜியூன் சங் நிதியமைச்சா் பசில் ராஜபக்சவை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார ரீதியான சவால்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு எவ்வாறு ஒத்துழைக்க முடியும்? என்பது குறித்து இதன்போது பேசியதாக அமெரிக்க தூதுவர் ஜூலி ஜியூன் சங் தெரிவித்துள்ளார்.
செழிப்பான, புதுமையான மற்றும் அண்டை நாடுகளுடன் இணைக்கப்பட்ட இலங்கைப் பொருளாதாரத்தை நாம் அனைவரும் விரும்புகிறோம்.
இதனை நோக்கமாகக் கொண்டே கொவிட் தொற்று நோய்க்குப் பின்னரான இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா 17.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களிப்புச் செய்தது எனவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை