தற்போது நிலவி வரும் தாழமுக்க நிலை காரணமாக அதிகளவு மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் கிழக்கு கரையோர பகுதி மக்கள் அவதான இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தற்போது நிலவி வருகின்ற தாழமுக்கம் காரணமாக கிழக்கு கரையோரப் பகுதிகளில் அதிகளவு மழை கிடைப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன் ஏனைய இடங்களில் ஒரளவு மழை கிடைக்கலாம்.
அத்தோடு பலமான காற்று வீசுவதற்கான சாத்தியப்பாடு உள்ளதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது. Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம்