அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறினார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விமல் வீரவங்ச,
பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் தன்னையும் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவையும் பிரதமர் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு பேசியதாகத் தெரிவித்தார்.
அமைச்சுப் பதவிகளில் இருந்து எங்களை நீக்கும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் தீர்மானத்துடன் தான் உடன்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.