முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் தொடருந்து மோதியதில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாங்குளம் கற்குவாரி பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் நிதர்சனா (வயது 22) என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் அவர் பணியாற்றி வந்துள்ளதாக தெரியவருகிறது.
அவருடைய மரணத்துக்கான காரணம் விபத்தா? தற்கொலையா? என்ற இரு கோணத்தில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு