இன்று சனிக்கிழமை சுழற்சி முறையில் இரு கட்டங்களாக நான்கு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை அமுலாகாது அல்லது குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.
இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.