Wednesday 24th of April 2024 02:07:32 PM GMT

LANGUAGE - TAMIL
.
முதலாவது டெஸ்ட்; ரிஷப் பந்தின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி ஓட்டங்கள் குவிப்பு!

முதலாவது டெஸ்ட்; ரிஷப் பந்தின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி ஓட்டங்கள் குவிப்பு!


சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நேற்று ஆரம்பமாகியது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் நேற்றைய முதல் நாள் நிறைவில் 85 ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் - 96, விராட் கோலி - 76, ஹனுமந்த விஹாரி - 58 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

ரவீந்திர ஜடேயா - 45, அஷ்வின் - 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளனர்.

பந்து வீச்சில் லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

போட்டியின் 2ம் நாளாகிய இன்று இந்திய அணி தொடர்ந்து தனது முதல் இனிங்ஸ் ஆட்டத்தை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE