Monday 18th of March 2024 10:18:46 PM GMT

LANGUAGE - TAMIL
-
மீண்டும் மாணவர்களை கட்டம் கட்டமாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!

மீண்டும் மாணவர்களை கட்டம் கட்டமாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!


மீண்டும் மாணவர்களை கட்டம் கட்டமாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாளை மறுதினம் முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் பொருந்தும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE