இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 574 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்தியுள்ளது இந்திய அணி.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி போட்டியின் இரண்டாவது நாளான இன்று 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
ரிசப் பந்த் 96 ஓட்டங்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
மேலும், ஹனுமா விஹாரி 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் விராட் கோஹ்லி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்திருந்தார். அவர் இந்த போட்டியில் 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால் மற்றும் விஷ்வ பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
போட்டியில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை