முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த வருடத்தில் சிறுபோக விவசாய நடவடிக்கைகளில் சேதன பசளை பாவனை தொடர்பாக விவசாயிகளுக்கு அந்தந்த விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் கட்டங்கட்டமாக மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(8) காலை 9.00மணிக்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலும், நண்பகல் 12.30மணிக்கு பாண்டியன்குளத்திலும் அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு துணுக்காயிலும் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து புதன்கிழமை(09) காலை 9.00மணிக்கு முள்ளியவளையிலும், நண்பகல் 12.30மணிக்கு குமுழமுனை மற்றும் கொக்குத்தொடுவாய் ஆகிய இரு பிரிவுகளை உள்ளடக்கியதாக குமுழமுனையிலும் இடம்பெறவுள்ளது.
மேலும் வியாழக்கிழமை(10) காலை 9.00மணிக்கு ஒலுமடுவிலும், நண்பகல் 12.30 மணிக்கு புதுக்குடியிருப்பிலும், மாலை 3.30மணிக்கு உடையார்கட்டிலும் இடம்பெறவுள்ளது.
எனவே குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு