ஷேன் வோர்ன் என்ற சிறந்த ஒரு கிரிக்கெட் வீரரை உலகம் தற்போது இழந்து விட்டதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் நேற்றுக் காலமானார். 52 வயதான அவர், தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தபோது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரின் மறைவுக்கு, கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை