இறக்குமதிக்கு திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைவதால் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையை தீர்க்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் இன்று அறிவித்துள்ளது.
அத்துடன் மேலும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் சில நாட்களில் எரிபொருள் கையிருப்பில் எந்த பற்றாக்குறையும் ஏற்படாதெனவும் அவர் குறிப்பிட்டார்.