இன்றும் (06) இரண்டரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, A, B மற்றும் C ஆகிய வலயங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரம் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அரசாங்கம் உறுதியளித்தபடி, எரிபொருள் இருப்புக்களின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு இடைநிறுத்தப்படலாம் அல்லது அதன் கால அளவைக் குறைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்று கிழமை என்பதால் இன்றைய தினம் பகல் வேளையில் 1,650 மொகாவொட் மின்சார தேவை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
அத்துடன் மாலை வேளையில் 1,550 மொகாவொட் மின்சாரத்திற்கான தேவையும் இரவு வேளையில் 2, 350 மொகாவொட் மின்சாரத்திற்கான தேவையும் நிலவும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் மிகவும் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.