வியர்வைதுளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
“பெண்தொழிலாளர்களைப் பாதுகாத்திடுங்கள், சி190 சமவாயத்தைஏற்படுத்துங்கள்” எனும் தொணிப்பொருளில் இவ்வருட பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதன்போது குறிதத் விடயத்தை விலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெண்கள் கவனயீர்ப்பு ஊர்வலமாக பாரதி ஸ்ரார் தனியார் மண்டபம் வரை சென்றனர்.
தனியார் மண்டபத்தில் மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்புாது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில், நாடளாவிய ரீதியில் உள்ள பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி