நாட்டில் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான அபராதப் பத்திரத்தை வீடுகளுக்கு அனுப்பும் முறைமையொன்றை காவல்துறை சிசிரீவி பிரிவின் ஊடாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு நகர் முழுவதும், 33 சந்திகள் காவல்துறை சிசிரீவி பிரிவினரால் கண்காணிப்படுகின்றன.
பொதுமக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை பிரதான கடமையாகக் கொண்டுள்ள இந்தப்பிரிவினால், குற்றமிழைக்கூடிய இயலுமையை குறைத்தல், குற்றத்தை அவதானித்து நடவடிக்கை எடுத்தல், குற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற கடமைகளும் ஆற்றப்படுகின்றன.
அத்துடன், போக்குவரத்து குற்றங்கள் தொடர்பிலும் இந்தப் பிரிவினால் அவதானிக்கப்படுகின்றமை தெரிந்ததே.