Friday 19th of April 2024 12:35:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!


கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளில் குடும்பங்களைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இநநிகழ்வில் ஜேர்மனி ஸ்டுட்காட் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எம்.சியான், பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.தாசிம், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.எழிலவணம், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 50 மாற்றுத்திறனாளிகளில் குடும்பங்களைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு ஜேர்மனி ஸ்டுட்காட் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE