பெருந்தோட்ட காணிகளை மலையக மக்களுக்கு பகிர்ந்தளிப்பதாயின் அரசாங்கம் ஏற்கனவே அதனை செயற்படுத்தியிருக்கும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பொஹவந்தலாவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அதேநேரம், நாட்டின் சட்டங்கள் எவரையும் பாதுகாப்பது நிச்சயமில்லை என அவர் தெரிவித்தார்.