Thursday 18th of April 2024 12:00:52 PM GMT

LANGUAGE - TAMIL
-
மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் றகமா நிறுவனமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின விழா!

மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் றகமா நிறுவனமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின விழா!


சர்வதேச மகளிர் தினம் இன்று (08) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும், றகமா (RAHAMA)நிறுவன பங்காளர் அமைப்பு சார்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களை சார்ந்த 150 பெண்கள் பங்கு பற்றிய சர்வதேச பெண்கள் தினம் இன்று மந்தை கிழக்கு பிரதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ரஞ்சனா நவரத்தினம் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது சமூக மட்டத்தில் முன்மாதிரியாக தொழிற்படுகின்ற அமைப்புக்களிற்கு சேவை பாராட்டு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் தேசிய மட்ட பளு தூக்குதல் போட்டியில் முதலிடம் பெற்ற இரு பெண்களும் மதிப்பளிக்கப்பட்டதுடன் பிரதேச செயலரும் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை கொவிட் 19 காலப்பகுதியில் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்ட விளைவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலானது ஆய்வு மற்றும் சம்பவக் கற்கை போன்ற முறைகள் ஊடாக ஆக்கபூர்வமான கருத்தாடல்கள் இடம் பெற்றது.

இதிலிருந்து பெறப்பட்ட முடிவுகள் அந்தந்த மாவட்ட செயலகங்களிற்கு அனுப்பி வைப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், உதவி பிரதேச செயலாளர், றகமா (RAHAMA) நிறுவனத்தை சார்ந்த நிறைவேற்று முகாமையாளர், அணித்தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE