அவசரமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் திட்டமிடுவதாக இலங்கை மின்சார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அவசர மின்சார கொள்வனவுக்கான உடன்படிக்கையைக் கைச்சாத்திட அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.