இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் வருண பகவானின் தயவில் வெள்ளையடிப்பில் இருந்து தப்பியது இலங்கை அணி.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தொடரை ஏற்கனவே இழந்திருந்த இலங்கை அணி ஆறுதல் வெற்றியை நோக்கி 3வதும் இறுதியுமான போட்டியில் விளையாடியது.
நேற்றைய தினம் நடைபெற்ற இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மீண்டும் மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.
41.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 166 ஓட்டங்களை பெற்றது இலங்கை அணி.
அதிகபட்சமாக தசுன் சானக ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களை பெற்றிருந்தார். ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சில் ரொம் கர்ரன் 4 விக்கெட்களை வீழ்திதியிருந்தார்.
இந்நிலையில் பெய்த மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் போட்டி முடிவு இன்றிய நிலையில் முடிவுக்கு வந்திருந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியதது.
முன்னதாக ரீ-20 தொடரையும் 3:0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை