தமிழ் திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்து நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்த வடிவேலு மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் மறுத்தனர்.
இதனால் பல வருடங்களாக எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்த வடிவேலு மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓடிடி தளத்துக்காக தயாராகும் புதிய படங்களிலும், சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்திலும் வடிவேலு நடிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது.
இதேவேளை, 10 இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கம் தடுத்தால் வடிவேலு நடிக்கும் படங்களை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.