Wednesday 24th of April 2024 06:51:41 AM GMT

LANGUAGE - TAMIL
.
கலக்கலாக மீண்டும் வரும் 'வைகைப் புயல்' வடிவேலு; லைக்கா நிறுவனத்துடன் 5 படங்களில் நடிக்க ஒப்பந்தம்!

கலக்கலாக மீண்டும் வரும் 'வைகைப் புயல்' வடிவேலு; லைக்கா நிறுவனத்துடன் 5 படங்களில் நடிக்க ஒப்பந்தம்!


தமிழ்த் திரை உலகில் நகைச்சுவியில் தன்கென தனி முத்திரை பதித்து ரசிகர்கள் மனங்களில் என்றென்றும் தனி இடம்பிடித்துள்ள வடிவேலு நீண்ட இடவெளிக்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்க உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படப்பிடிப்பின் போது இயக்குநர் சிம்பத்தேவனுக்கும் வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் படப்பிடிப்பு பாதியில் கைவிடப்படும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் இயக்குநர் சிம்புத்தேவன் தயாரிப்பாளர் சங்கத்தில் மேற்கொண்ட முறைப்பட்டை அடுத்து வடிவேல் புதிய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் கடந்த சில வருடங்களாக திரைப்படம் எதிலும் நடிக்காது ஒதுங்கியிருந்தார் வடிவேலு.

இந்நிலையில் தான் லைக்கா நிறுவனம் அடுத்தடுத்து 5படங்களில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு கருத்து தெரிவிக்கையில்,

‘மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான்.

என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். ஐந்து படங்களில் என்னை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார்.

நல்ல நேரம் பொறந்தாச்சு. இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE