நீண்ட இடைவெளியின் பின்னர் வடிவேலு நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் பறிபோயுள்ள நிலையில் மாற்று பெயர் தொடர்பில் படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்துக்கும் ‘நாய்சேகர்’ என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்துள்ள புதிய படத்திற்கு 'நாய் சேகர்' என்ற பெயரை படக்குழுவினர் முன்னரே பதிவு செய்திருந்தனர்.
இதையடுத்து 'நாய் சேகர்' படப் பெயரை வாங்குவதற்கு வடிவேலு படக்குழு முயற்சிகளை எடுத்திருந்தது.
இருந்த போதிலும்,
இந்நிலையில் பிகில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.
அதன்படி இப்படத்திற்கு ‘நாய்சேகர்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
'நாய் சேகர்' தலைப்பு சதீஷ் படத்துக்கு கிடைத்துவிட்டதால், தற்போது வடிவேலு படத்துக்கு வேறு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
இதனால் வடிவேலு நடிக்கும் படத்துக்கு ‘மீண்டும் நாய்சேகர்’, ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என இவற்றுள் ஏதாவது ஒரு தலைப்பை வைக்க ஆலோசித்து வருகிறார்களாம்.