Tuesday 23rd of April 2024 04:46:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
எனக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சினை இருப்பது உண்மை! - மனம் திறக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!

எனக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சினை இருப்பது உண்மை! - மனம் திறக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!


தனக்கும் தனது மகன் விஜய்க்கும் இடையே பிரச்சினை இருப்பது உண்மைதான் என பிரபல இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கடந்த பல ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அதன் பெயரால் உருவாக்கப்பட்ட அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அடிப்படையாக கொண்டு தந்தை-மகன் இடையே ஏற்பட்ட பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வெளியாகியுள்ள வார இதழ் ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தாக கூறி பிரசுரித்துள்ள செய்தி குறித்து விளக்கமளிக்கும் காணொளிப்பதிவிலேயே இத்தகவலை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கும் தந்தைக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரும் மனைவி ஷோபாவும் விஜயின் வீட்டுக்கு பேசுவதற்கு சென்றிருந்த போது வீட்டுக்குள் செல்வதற்கு அனுமதிக்காது வெளியிலேயே காரில் காக்க வைத்து விஜய் திருப்பி அனுப்பியதாக எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக குறித்த வார இதழில் வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு விளக்கம் அளித்து எஸ்ஏ சந்திரசேகர் காணொளி பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த காணொளி பதிவில் அவர் கூறியதாவது:

இன்றைய வார இதழில் எனது பேட்டி வெளியாகியுள்ளது. அந்த பேட்டி மிகவும் நன்றாக உள்ளது. நான் கூறியிருந்த தகவல்களை சரியாக பதிவு செய்து இருந்தார்கள். ஆனால் என்னுடைய குடும்பத்தை பற்றி ஒரு தவறான, நான் சொல்லாத ஒரு விஷயத்தை அதில் பதிவு செய்துள்ளார்கள். அதற்காகவே இந்த விளக்கம்.

நானும் ஷோபாவும் விஜய் வீட்டிற்கு வெளியில் காரில் காத்திருந்ததாகவும், விஜய் ஷோபாவை மட்டும் உள்ளேயே வரச்சொன்னதாகவும் நாங்கள் இருவருமே திரும்பி வந்து விட்டதாகவும் ஒரு தவறான செய்தியை அதில் பதிவு செய்துள்ளார்கள். அது உண்மை அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஏனெனில் எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான். அதை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் விஜய்யும் அவருடைய தாயும் எப்பொழுதும் போல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கின்றார்கள், பழகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, மனக்கசப்பும் இல்லை.

அவ்வாறு இருக்கும்போது ஷோபா அவர்கள் வீட்டின் வெளியே காத்திருந்ததாக பொய்யான ஒரு தகவலை பதிவு செய்ததற்கு விளக்கம் அளிக்கவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றேன். இதை விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறேன்’ என்றார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE