நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்யத்தக்க வகையிலான பல்பொருள் அங்காடி ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கடற்றொழில் அமைச்சு வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களின் நலன்களை கருத்திலெடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்விற்பனை நிலையத்தின் மூலம் கடற்றொழில் அமைச்சின் பணியாளர்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.