பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 12 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலை; புலிகள் இயக்கத்துக்காக, கொழும்பில் நிதி சேகரித்து கொடுத்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த கந்தப்பு ராஜசேகர் என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் சார்பில், இன்று சட்டத்தரணி கே.வி. தவராசா முன்னிலையாகி இருந்தார்.