இலங்கையிலிருந்து மேலும் பத்துப் பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்று சேர்ந்துள்ளனர்.
இன்று பகல் படகில் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், தனுஷ்கோடி மணற்திட்டில் இறக்கிவிடப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
முன்னதாக இன்று அதிகாலை மன்னார், யாழ்ப்பாணம், சிலாவத்துறையைச் சேர்ந்த அறுவர் தமிழகத்தினைச் சென்றடைந்திருந்தமை தெரிந்ததே.
இதனால் இன்று மட்டும் தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து சென்று சேர்ந்த அகதிகளின் மொத்த எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.