மட்டக்களப்பில் சீயோன் தேவாலயம் உட்பட உயிர்த்த ஞாயிறு படுகொலை நினைவு தின விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சக்ரான் காசீம் தலைமையிலான தற்கொலைக் குண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், 93 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் தேவாலயம் பாதிப்படைந்து இன்று 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சாந்தி வேண்டி ஆராதனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆராதனை நிகழ்வில் ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட,காயமடைந்தவர்களின் குடும்ப உறவினர்கள்,பாதிக்கப்பட்டவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஒரு குடும்பத்தில் பெற்றோர், பிள்ளைகள் அனைவரும் பலியான சம்பவம், பிள்ளைகள் இருக்க பெற்றோர்கள் பலியான சம்பவம், பெற்றோர்கள் இருக்க பிள்ளைகள் பலியான சம்பவம் என மேற்படி மூன்று தேவாலயங்களிலும் இந்த கோரமான குண்டு தாக்குதலில் பலியான குடும்ப உறவுகளின் அனுபவங்கள் மிகவும் துயரமானவை.
முழு நாட்டையும் சோகத்திற்கு உள்ளாக்கியதாக இந்த சம்பவம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு