எரிபொருள் தாங்கி தொடருந்து ஒன்று ரம்புக்கனை - கடிகமுவ இடையே தடம்புரண்டுள்ளதை அடுத்து மலைநாட்டிற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, இன்று முற்பகல் கொழும்பு - கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மலைநாட்டுக்கான தொடருந்து சேவைகள் ரம்புக்கனை வரையிலும், பேராதனையிலிருந்து சேவைகளை ஆரம்பிக்கும் தொடருந்து சேவைகள் கடிகமுவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தடம்புரண்ட தொடருந்தை தடமேற்றும் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.