Saturday 20th of April 2024 10:42:36 AM GMT

LANGUAGE - TAMIL
-
திருகோணமலையில் கடலில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலையில் கடலில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!


திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலிங்க நகர் கடற்பகுதியில் கடலில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக துறைமுக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கடல் பரப்பில் இன்றைய தினம் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் குறித்த சடலம் மிதப்பதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் மற்றும் மீனவர்கள் இணைந்து குறித்த சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை இலிங்க நகர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகநாதன் கருணாகரன் (வயது-49) எனவும் தெரியவருகிறது.

குறித்த சடலத்தை திருகோணமலை மாவட்ட பதில் நீதவான் தர்ஷினி அன்னதுரை முன்னிலையில் குடும்பத்தினர் அடையாளப்படுத்தினர். மேலும் குறித்த சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் இதன்போது நீதவான் கட்டளையிட்டார்.

குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE