முல்லைத்தீவு மாவட்ட செயலக பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினரால் இன்று(19) காலை 9.00 மணிக்கு சிரமதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மாவட்ட செயலகத்திற்கு முன்னுள்ள விளையாட்டு மைதானம் மற்று உள்ளக விளையாட்டரங்கினை சுத்தப்படுத்தும் பணி இடம்பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வினை மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், மாவட்ட பெறியியலாளர் சி.கஜந்த், மாவட்ட செயலக பல்நோக்கு அபிவிருத்தி செயலணி பிரிவின் உதவிப்பணிப்பாளர் கப்டன் ஐ.சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு