இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினை சென்னையில் இன்று சந்தித்து பேசினார்.
இதன்போது தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியிருந்தார்.
இந்த விவகாரம் இரு நாடுகளிலும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் இது குறித்து இச்சந்திப்பின்போது பேசப்பட்டதாக என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.