Friday 19th of April 2024 05:40:21 PM GMT

LANGUAGE - TAMIL
கோப்பு படம்!
கூடுதல் நேரம்; இலங்கை அணிக்கு 40% அபராதம்!

கூடுதல் நேரம்; இலங்கை அணிக்கு 40% அபராதம்!


அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இலங்கை அணி இரண்டு ஓவர்கள் பின்தங்கியிருந்ததனால் இவ்வாறு ஐசிசி போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்ல அபராதம் விதித்துள்ளார்.

வீரர்களுக்கான ஐசிசி நடத்தை விதியின் பிரிவு 2.22 இன் படி, சரியான நேரத்தில் வழங்கத் தவறிய ஒவ்வொரு ஓவருக்கும் அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்படும்.

இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான முதல் இரு போட்டிகளையும் வெற்றிபெற்றுள்ளதன் மூலம் அவுஸ்திரேலியா அணி ரி-20 தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் தொடரின் இறுதியும் 3வதுமான போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE