Wednesday 24th of April 2024 11:09:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாகன இறக்குமதிக்கான உரிமம் - மனுஷ நாணயக்கார

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாகன இறக்குமதிக்கான உரிமம் - மனுஷ நாணயக்கார


வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள், இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் போது அவர்கள் அனுப்பும் தொகையின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கக்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு வரியில்லா சலுகையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால்இ வங்கி முறையின் மூலம் சட்டரீதியாக பணம் அனுப்பும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE