குரங்கம்மை நோய் உலகில் பல நாடுகளில் பரவி வரும் நிலையில் இது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு நேற்று கூடி ஆராய்ந்தது.
இந்தக் கூட்டத்தின் போது குரங்கம்மை பரவலை சா்வதேச அவசரநிலையாக அறிவிப்பதா? என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. எனினும் அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை, ஆப்பிரிக்காவில் கடந்த 1970-கள் முதலே குரங்கம்மை பரவி வருகிறது. இது அண்மைக்காலமாகவே ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளது. உலகின் 42 நாடுகளில் இதுவரை 3,300 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 80 சதவீதத்தினா் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்தவா்கள்.
இந்நிலையில்ஆப்பிரிக்காவில் நீண்டகாலமாக இந்த நோய் பரவி வரும் நிலையில் அதனைக் கண்டு கொள்ளவில்லை. தற்போது ஐரோப்பிய நாடுகளில் இந்நோய் வேகமாகப் பரவ ஆரம்பித்ததுமே இதனை சுகாதார அவசர நிலையாக அறிவிக்க உலக சுகாதார அமைப்பு தயாராகி வருகிறது என முன்னணி ஆப்பிரிக்க விஞ்ஞானிகளின் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
வளரும் நாடுகளை ஒரு நோய் தாக்கும் போது அது அவசரநிலை அல்ல. வளர்ந்த நாடுகள் பாதிக்கப்படும் போதுதான் அது அவசரநிலையாகிறது என குரங்கம்மை நோய் சிகிச்சை குறித்து ஆராய்ந்துவரும் மத்திய ஆபிரிக்க குடியரசின் பாங்குயில் உள்ள ஆய்வு நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் பேராசிரியர் இம்மானுவேல் நகூன் கூறினார்.
இதேவேளை, குரங்கம்மை உலக சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டால் அதற்கு கொவிட் மற்றும் போலியோ ஒழிப்பு நடவடிக்கைகள் போன்று முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.