இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு 161 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 43.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அணிசார்பில் அதிகபடியாக தமது முதல் ஒருநாள் கன்னிச் சதத்தை பதிவுசெய்த சாமிக்க கருணாரத்ன 75 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர் 75 பந்துகளுக்கு முகங்கொடுத்து 08 நான்கு ஓட்டங்கள் 02 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு 75 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களையும், சரித் அசலங்க 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹெசில்வுட் 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், மேத்யூ குஹ்னெமன் 26 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய அணி 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.
இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற நான்கு ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி மூன்று போட்டிகளிலும், அவுஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
அத்துடன், இவ்விரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை 2 -1 என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி வென்றிருந்தது.
இதேவேளை, அவுஸ்திரேலிய அணி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இலங்கை, கொழும்பு