அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி சாதனை வெற்றியை உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் சொந்த மண்ணில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடர் ஒன்றை இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ரி-20 தொடரை இழந்த நிலையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை 3 : 2 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
தொடரின் 5வதும் இறுதியுமான போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.நீண்ட காலமாக இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் ஆஸிக்கு எதிரான வெற்றி இலங்கை அணி வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இலங்கை