தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் காளை ஓட்டப் பந்தய போட்டியின் போது மூங்கில் மற்றும் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட பார்வையாளர்கள் அமரும் பகுதி உடைந்து விழுந்ததில் 4 பேர் பலியானதுடன், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கொலம்பியாவின் எல் எஸ்பினல் நகரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு சிறுவன் உயிரிழந்ததாக டோலிமா மாகாண ஆளுநர் ஜோஸ் ரிக்கார்டோ ஓரோஸ்கோ உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்தவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பார்வையாளர்கள் அமரும் பகுதி உடைந்து விழுந்ததை அடுத்து பலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டனர் என டோலிமா மாகாண சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் மேஜர் லூயிஸ் பெர்னாண்டோ வெலஸ் குறிப்பிட்டுள்ளார்.