Tuesday 23rd of April 2024 03:00:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
உக்ரைன் - ஸ்னேக் தீவில் இருந்து வெளியேறும் ரஷ்யா;  உணவு, தானிய ஏற்றுமதியில் சிக்கல் தீரும் என நம்பிக்கை!

உக்ரைன் - ஸ்னேக் தீவில் இருந்து வெளியேறும் ரஷ்யா; உணவு, தானிய ஏற்றுமதியில் சிக்கல் தீரும் என நம்பிக்கை!


கருங்கடலில் உள்ள உக்ரைனுக்கு சொந்தமான ஸ்னேக் தீவில் இருந்து வெளியேற ரஷ்யா முடிவு செய்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த ஐ.நா. முயல்கிறது. அந்த முயற்சிக்கு உறுதுணையாக ஸ்னேக் தீவிலிருந்து ரஷ்யப் படைகள் விலக்கப்படுகின்றன எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

உக்ரைனிலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை நாங்கள் தடுக்கவில்லை என்பதை உணா்த்துவதாக இந்த நடவடிக்கை அமையும் என ரஷ்யா கருத்து வெளியிட்டுள்ளது.

கருங்கடல் முழுவதையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால்தான் தங்களால் தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று உக்ரைன் இதுவரை குற்றம் சாட்டி வந்தது. தற்போது ஸ்னேக் தீவிலிருந்து நாங்கள் விலகிவிட்டோம். இனி உக்ரைன் தான் கருங்கடலில் அந்த நாடு முடக்கி வைத்துள்ள சரக்குப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க முன்வர வேண்டும் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் போரின் தொடக்க நாட்களிலேயே ஸ்னேக் தீவை ரஷ்யா கைப்பற்றியது. கருங்கடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவில், ரஷ்யா தனது தொலைதூர வான் பாதுகாப்பு தளபாடங்களை நிறுவி வலிமையான இராணுவ நிலையை ஏற்படுத்தியிருந்தால் தெற்கு உக்ரைன், வட மேற்கு கருங்கடல் பகுதி என் அந்தப் பிராந்தியத்தின் வான், கடல் மற்றும் தரை எல்லைகளை ரஷ்யாவால் தனது பிடிக்குள் கொண்டு வந்திருக்க முடியும்.

எனினும், அந்தத் தீவை தற்போது ரஷ்யா கைவிட்டதால் அது மீண்டும் உக்ரைன் இராணுவத்தின் வசம் வந்துள்ளது.

இதேவேளை, நல்லெண்ண அடிப்படையில் ஸ்னேக் தீவை விட்டு வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளதை உக்ரைன் மறுத்துள்ளது.

ஸ்னேக் தீவில் தங்கள் படையினரின் தொடா் தாக்குதலுக்கு உள்ளானதால்தான் அங்கிருந்து ரஷ்யப் படை வெளியேறியதாக உக்ரைன் அதிகாரிகள் கூறினர்.

அந்தத் தீவுக்கு தளபாடங்கள், உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் படகுகள் மீது உக்ரைன் படையின் ஏவுகணைகள் மூலமும் ஆளில்லா விமானம் மூலம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வந்தனா். மேலும், அந்தத் தீவிலுள்ள ரஷ்ய இராணுவ நிலைகள் மீதும் தொடா்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது.இதனால் அந்தத் தீவை தொடா்ந்து தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது கடினமான காரியமாக இருந்ததால்தான் அங்கிருந்து ரஷ்யப் படை பின்வாங்கியதாக மேற்கத்திய நிபுணா்களும் கூறுகின்றனா்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE